Wednesday, December 8, 2010

விளம்பரங்களின் தாக்கம்

இன்றைய இளம்தலைமுறையினரை விளம்பரங்கள் வெகுவாக பாதிக்கின்றன. அவைகளின் நோக்கம் வியாபார நோக்கத்திற்காக இருந்தாலும் பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கும் ஊடகத்தில் அவை சங்கடங்களையே தோற்றுவிக்கின்றன. அதுவும் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் மனதில் நஞ்சை எற்றுவதாகவே உள்ளன. சில உதாரணங்கள் கீழே:

உதாரணம் 1 :

 Clinic Plus ஷாம்பூ விளம்பரம். அதில் தாயும் குழந்தையும் கடைக்கு செல்வார்கள். அங்கு ஒரு பெண்ணின் நீள தலை  முடியைப் பார்த்து அக்குழந்தை வியக்கும். அப்பெண் திரும்புவாள், பார்த்தால் அப்பெண் குழந்தையின் கணித ஆசிரியையாய் இருக்கும்.ஆசிரியை சிறு பெண்ணிடம் கேட்பாள் "3 ஐ 3 ஆல் பெருக்கினால் எவ்வளவு? ' என்று.
குழந்தையும் 9 எனக் கூறும். ஆனால் ஆசிரியை சொல்லுவார் 3 என. எப்படி என்றால் 3 வாரம் ,வாரம் 3 முறை அந்த ஷாம்பூ போட்டால் 3 செ.மீ முடி வளரும் எனவும் விளக்கம் அளிப்பார்.

உதாரணம்  2 :

 "Close Up " விளம்பரம்.இதில் ஜோடிகள் இவள் முத்தம் பரிமாறிக் கொள்வார்கள் இந்த பேஸ்ட் யூஸ்  பண்ணிய பிறகு புத்துணர்ச்சியாக இருக்குமாம். இது போல எனக்கு தெரிந்து 4 வேறுபட்ட ஆனால் இதே கருத்தை மையமாய் கொண்டு இதே பேஸ்ட் விளம்பரம் வருகிறது.

உதாரணம்  3 :

"Insurance Company " விளம்பரம். இரயில் பயணம் போன்று துவங்கும். வாலிபன் side lower berth இருக்கையில் அமர்ந்திருப்பான் . சிறுவன் ஒருவன் lower berth இருக்கையில் இருப்பான். வாலிபன் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே சிறுவனிடம் நீட்டுவான், சிறுவனுக்கு பாக்கெட் முழுவதும் கொடுப்பான். பிறகு பொம்மை ஒன்று வரும்.அதையும் வாங்கி சிறுவனுக்கே கொடுப்பான். பிறகு சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு அவனைக் கூப்பிட்டு உட்கார வைப்பான்.  இவன் சிறுவனின் இடத்தில் உட்காருவான்.  இது வரையில் பரவாயில்லே எனத் தோன்றும். அடுத்த சீனில் அவன் பக்கத்தில் ஒரு டீன் ஏஜ் பெண் அமர்ந்திருப்பாள். ஒரு வாய்ஸ் வரும் "நீங்கள் சிறுக சிறுக இன்வெஸ்ட் செய்தால் பெரிய லாபம் கிடைக்கும்"  என்று.
            
  எங்கே போய் முட்டிக்கொள்வது. இவ்வாறெல்லாம் விளம்பரம் எடுத்து வியாபாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இருப்பவர்களை  என் செய்வது. இவர்களின் வியாபாரத்திற்காக மக்கள் நலனை கிடப்பில் போட்டு விடுகிறார்கள். சினிமா படங்களுக்கு சென்சார்  போல விளம்பரங்களுக்கும் சென்சார் வந்தால் தான் நன்றாக இருக்கும்.

1 comment: