இன்றைய இளம்தலைமுறையினரை விளம்பரங்கள் வெகுவாக பாதிக்கின்றன. அவைகளின் நோக்கம் வியாபார நோக்கத்திற்காக இருந்தாலும் பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கும் ஊடகத்தில் அவை சங்கடங்களையே தோற்றுவிக்கின்றன. அதுவும் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் மனதில் நஞ்சை எற்றுவதாகவே உள்ளன. சில உதாரணங்கள் கீழே:
உதாரணம் 1 :
Clinic Plus ஷாம்பூ விளம்பரம். அதில் தாயும் குழந்தையும் கடைக்கு செல்வார்கள். அங்கு ஒரு பெண்ணின் நீள தலை முடியைப் பார்த்து அக்குழந்தை வியக்கும். அப்பெண் திரும்புவாள், பார்த்தால் அப்பெண் குழந்தையின் கணித ஆசிரியையாய் இருக்கும்.ஆசிரியை சிறு பெண்ணிடம் கேட்பாள் "3 ஐ 3 ஆல் பெருக்கினால் எவ்வளவு? ' என்று.
குழந்தையும் 9 எனக் கூறும். ஆனால் ஆசிரியை சொல்லுவார் 3 என. எப்படி என்றால் 3 வாரம் ,வாரம் 3 முறை அந்த ஷாம்பூ போட்டால் 3 செ.மீ முடி வளரும் எனவும் விளக்கம் அளிப்பார்.
உதாரணம் 2 :
"Close Up " விளம்பரம்.இதில் ஜோடிகள் இவள் முத்தம் பரிமாறிக் கொள்வார்கள் இந்த பேஸ்ட் யூஸ் பண்ணிய பிறகு புத்துணர்ச்சியாக இருக்குமாம். இது போல எனக்கு தெரிந்து 4 வேறுபட்ட ஆனால் இதே கருத்தை மையமாய் கொண்டு இதே பேஸ்ட் விளம்பரம் வருகிறது.
உதாரணம் 3 :
"Insurance Company " விளம்பரம். இரயில் பயணம் போன்று துவங்கும். வாலிபன் side lower berth இருக்கையில் அமர்ந்திருப்பான் . சிறுவன் ஒருவன் lower berth இருக்கையில் இருப்பான். வாலிபன் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே சிறுவனிடம் நீட்டுவான், சிறுவனுக்கு பாக்கெட் முழுவதும் கொடுப்பான். பிறகு பொம்மை ஒன்று வரும்.அதையும் வாங்கி சிறுவனுக்கே கொடுப்பான். பிறகு சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு அவனைக் கூப்பிட்டு உட்கார வைப்பான். இவன் சிறுவனின் இடத்தில் உட்காருவான். இது வரையில் பரவாயில்லே எனத் தோன்றும். அடுத்த சீனில் அவன் பக்கத்தில் ஒரு டீன் ஏஜ் பெண் அமர்ந்திருப்பாள். ஒரு வாய்ஸ் வரும் "நீங்கள் சிறுக சிறுக இன்வெஸ்ட் செய்தால் பெரிய லாபம் கிடைக்கும்" என்று.
எங்கே போய் முட்டிக்கொள்வது. இவ்வாறெல்லாம் விளம்பரம் எடுத்து வியாபாரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இருப்பவர்களை என் செய்வது. இவர்களின் வியாபாரத்திற்காக மக்கள் நலனை கிடப்பில் போட்டு விடுகிறார்கள். சினிமா படங்களுக்கு சென்சார் போல விளம்பரங்களுக்கும் சென்சார் வந்தால் தான் நன்றாக இருக்கும்.
அன்புடன் மங்கை
Wednesday, December 8, 2010
Thursday, November 25, 2010
மனித தெய்வங்கள்
நகரத்தில் பிறந்து
அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்ந்து
செடி, கொடிகள் மற்றும் பறவைகளைக் கூட
புத்தகத்தில் மட்டுமே பார்த்து
உதவிக்குக் கூட அண்டை வீட்டுக்
கதவுகள் மூடியபடி இருந்து
பணியிடத்திலும் கூட மனம் விட்டு
பேச முடியாமல் வாழ்ந்து
அலுத்து போன நண்பிக்கு
ஓட்டு வீடுகளாய் எளிமையாய் இருந்தாலும்
இயற்கையோடு இணைந்து
அண்டை அயலாருக்கு உதவி செய்து
நாட்டு மக்களின் உணவுத் தேவையை
பூர்த்தி செய்யும் கிராம மக்கள்
மாறுபட்ட மனித தெய்வங்களாய் தெரிந்தனர்! ! !
அடுக்குமாடிக் குடியிருப்பில் வளர்ந்து
செடி, கொடிகள் மற்றும் பறவைகளைக் கூட
புத்தகத்தில் மட்டுமே பார்த்து
உதவிக்குக் கூட அண்டை வீட்டுக்
கதவுகள் மூடியபடி இருந்து
பணியிடத்திலும் கூட மனம் விட்டு
பேச முடியாமல் வாழ்ந்து
அலுத்து போன நண்பிக்கு
ஓட்டு வீடுகளாய் எளிமையாய் இருந்தாலும்
இயற்கையோடு இணைந்து
அண்டை அயலாருக்கு உதவி செய்து
நாட்டு மக்களின் உணவுத் தேவையை
பூர்த்தி செய்யும் கிராம மக்கள்
மாறுபட்ட மனித தெய்வங்களாய் தெரிந்தனர்! ! !
Friday, October 22, 2010
முட்டுக்கட்டை
நண்பனொருவன் சொன்னான் இலவச
பயிற்சி வகுப்பு எடுப்போம்
இயலாத பள்ளி மாணவர்களுக்கு என்று..
நாங்களும் எங்கள் பகுதியில் ஆரம்பித்தோம்
முதல் நாள் வந்தார்கள் வெட்டி வேலை என்றார்கள்
அடுத்த நாள் இதெல்லாம் ஆகற வேலையா என்றார்கள்
விடுமுறை நாட்களில் திறன் அறியும்
போட்டிகளில் வென்றவர்க்கு
பரிசு கொடுத்தால் மத பிரச்சாரமா
என்றன மத அமைப்புகள்
இலவச நோட்டு புத்தகம் கொடுத்தால்
கட்சியில் ஆள் சேர்கிறீர்களா
என்றனர் கட்சி அமைப்பினர்
எங்களையும் அவர்களைப் போல எண்ணி
எங்கள் முயற்சிக்கு கைகொடுக்காவிட்டாலும்
முட்டுக்கட்டை போடாமல் இருக்கலாமே
பயிற்சி வகுப்பு எடுப்போம்
இயலாத பள்ளி மாணவர்களுக்கு என்று..
நாங்களும் எங்கள் பகுதியில் ஆரம்பித்தோம்
முதல் நாள் வந்தார்கள் வெட்டி வேலை என்றார்கள்
அடுத்த நாள் இதெல்லாம் ஆகற வேலையா என்றார்கள்
விடுமுறை நாட்களில் திறன் அறியும்
போட்டிகளில் வென்றவர்க்கு
பரிசு கொடுத்தால் மத பிரச்சாரமா
என்றன மத அமைப்புகள்
இலவச நோட்டு புத்தகம் கொடுத்தால்
கட்சியில் ஆள் சேர்கிறீர்களா
என்றனர் கட்சி அமைப்பினர்
எங்களையும் அவர்களைப் போல எண்ணி
எங்கள் முயற்சிக்கு கைகொடுக்காவிட்டாலும்
முட்டுக்கட்டை போடாமல் இருக்கலாமே
Thursday, October 14, 2010
சர்வதேச கண்பார்வை தினம்
அக்டோபர் மாதம் 2 -வது வியாழக்கிழமை சர்வதேச கண்பார்வை தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் நாம் அனைவரும் ஒரு வாக்குறுதி எடுப்போம் கண்பார்வை குறைபாடற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவோம் என்று.
இந்நாளில் நாம் அனைவரும் ஒரு வாக்குறுதி எடுப்போம் கண்பார்வை குறைபாடற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவோம் என்று.
Subscribe to:
Posts (Atom)