Monday, August 3, 2009

ஆத்திகனும் நாத்திகனும்

கோவிலில் கடவுளைத் தேடி
கோவிலைச் சுத்தம் செய்து
கோவிலையே தங்கள் உரிமையாய் கொண்டாடி
மனதை அசுத்தமாக வைத்திருக்கும்
ஆத்திகனை விட
மனதைச் சுத்தமாக வைத்து
அனைவருக்கும் நன்மை செய்யும்
நாத்திகனே ஒரு படி மேலானவன்
கடவுளின் ஆசியும் இருக்கும்

Sunday, July 19, 2009

நம்பிக்கை நட்சத்திரம்

சோர்வு ஏற்படும் போது சக்தி அளிக்கும் வள்ளலாய்
மனம் தளரும் போது ஊக்கம் அளிக்கும் ஒளியாய்
முடியாதெனும் போது முடியுமெனும் நம்பிக்கையாய்
வாழ்வில் வரும் வசந்தத்திற்கு காரணமாய்
என்றென்றும் நீ வர வேண்டும்
என்ற எண்ணத்துடன் வாழ்கிறேன்

Wednesday, May 6, 2009

நானும் நீயும்

கடல் கடந்து போனாலும்
உன் முகம் மறக்காது...
எவ்வளவு தொலைவில் நீ இருந்தாலும்
நம் அன்பு மாறாது...
வாழ்நாள் முழுதும் உன்னுடன்
துணையாய் வருவேன்..